மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் கணவர் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் மருத்துவ தவறின் காரணமாக உயிரிழந்திருந்தார்.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் அவரது கணவர் நேற்று (24) அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா பனிக்கர் புளியங்குளத்தை சேர்ந்த எஸ் .சுதன் (26 வயது) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
தற்போது குழந்தை தாய், தந்தை இன்றி உறவினர்களின் பராமரிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவரது மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.