ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியில் ஒவ்வொருவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுவரை 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ரணிலுடன் கைகோர்த்துள்ளனர். தலதா அத்துகோரள தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன், விரைவில் ரணிலுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து
காவிந்த ஜயவர்தன, அஜித் மானப்பெரும ஆகிய இருவரே இவ்வாறு ரணில் பக்கம் தாவ உள்ளதாக தெரியவருகிறது.