மன்னார் முருங்கன் பகுதியில் நேற்று (21) மாலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் – முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் ஹயஸ் வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கல்முனையில் இருந்து மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்கு குறித்த வாகனத்தில் வருகை தந்தவர்களின் வாகனம் முருங்கன், இசைமாலை தாழ்வு, நரிக்காடு வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இவர்களில் வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வாகனத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறவினர்கள் என தெரிய வருகிறது.


