யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் பொலிஸார் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொசன் தினமான இன்று மதுபானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவரும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவரும், கஞ்சா கலந்த மாவாவுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கையின் போது 19 மதுபான போத்தல்கள், 70 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 80 கிராம் கஞ்சா கலந்த மாவா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.