ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் பொசன் போயா தினத்தை முன்னிட்டு 289 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 289 கைதிகள் நேற்று (21) விசேட பொது மன்னிப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.