புனித ஹஜ் பெருநாள் தொழுகை நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இன்று(17) இடம்பெற்றன.
அந்தவகையில், ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது.
இதன் போது மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்.
இதேவேளை அம்பாறை நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.