நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் டெங்கு தாக்கத்தில் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், காலி, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய 7 மாவட்டங்களே அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் 26,084 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 9,558 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.