யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி – நுணாவில் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குருநாகலைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம், குறித்த வீதியில் நடந்து சென்ற குடும்பஸ்தரை மோதியே குறித்த விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.