பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை நபரொருவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்து வைத்தியசாலையின் ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (10) முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை நபர் ஒருவர் தாக்கியுள்ளார்.
இதன்போது, “உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து”, “ஆயுதம் தாங்கிய பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்து” “சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்” போன்ற கோரிக்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் முன்வைக்கப்பட்டன.