யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31 கடற்தொழிலாளர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (10) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
1986ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் 31 பேரும் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களின் 38வது நினைவுதின நிகழ்வானது யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 கடற்றொழிலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்று இடம்பெற்றது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள், கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செய்தனர்.