நாட்டில் தற்போது நிலவிவரும் காலநிலை சீரின்மை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (04) உரையாற்றிய போதே அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சீரற்ற காலநிலையால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு 41 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
23 மாவட்டங்களில் 262 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 33 ஆயிரத்து 422 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பிரதேசங்களில் அரசாங்கத்தினால் நடத்தப்படும் 116 பாதுகாப்பு நிலையங்களில் 2,368 குடும்பங்களைச் சேர்ந்த 9,248 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.