மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தாயொருவர், தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதுடன், அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார் நீதிமன்றம் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி நேற்று (03) திங்கட்கிழமை, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு குறித்த இளைஞன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.