நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை சீரின்மையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காலி – நெலுவ வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் நோயாளர் காவு வண்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் அனைவரும் ஹெலிகோப்டர் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சமூக சுகாதார வைத்திய அதிகாரி அமில சந்திரசிறி தெரிவித்தார்.