யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவரால் வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு (27) 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஏன் மோட்டார் வண்டியில் உள்ளே வந்தீர்கள் என கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது மதுபோதையில் வந்த நபர், அலுவலக மேசை மீது இருந்த அச்சு இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளார்.
இந்நிலையில், ஒன்றுகூடிய வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

