முல்லைத்தீவு – நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (27) அதிகாலை கொள்ளைக்கும்பலால் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
நட்டாங்கண்டல் பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் வீட்டில் இருந்தவர்களைக் கட்டி வைத்து கத்தி முனையில் மிரட்டியுள்ளனர்.
வீட்டின் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்களில் ஒருவர், வாசல் கதவைத் திறந்த பின்னர் மற்றையவர்கள் உள்நுழைந்ததாக வீட்டில் இருந்தவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குடும்பத்தில் இருந்ந 14 வயது சிறுவனை கொலை செய்யப் போவதாக மிரட்டிய கொள்ளையர்கள், அந்தச் சிறுவனின் தாய், தந்தையின் கண்களை மூடிக் கட்டி விட்டு மகனை நகைகளை எடுத்துத் தருமாறு மிரட்டியுள்ளனர்.
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் களவாடிச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.