கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சிறுமியின் சகோதரியின் காதலலாலேயே குறித்த சிறுமி வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த தகவல் கிளிநொச்சி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்படடுள்ளார்.