கனடாவில் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தமிழ் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
Bradford West Gwillimbury பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞன் என்பவரே பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
குறித்த இளைஞன் மீது துஷ்பிரயோகம் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் இதுவரை நீதிமன்றத்தினால் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. குறித்த தொடர்பான தகவலை York பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் தன்னை18 வயதுக்கு குறைந்தவர் போல் அடையாளம் காட்டிக் கொண்டு இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரினால் மேலும் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.