காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள புகையிரத பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரயில் கடவையின் பாதுகாப்பற்ற சமிஞ்சை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களும் 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.