கொழும்பு , வெள்ளவத்தை பகுதியில் முதலாளியால் தாக்கப்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கொலை சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச்சந்தேக நபரான 42 வயதுடைய விற்பனை நிலையத்தின் முதலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.