சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் நேற்று (31) அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வேலாயுதர் பாலசுப்பிரமணியம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மனைவியை பிரிந்து கடந்த 10 ஆண்டுகள் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
குறித்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து விட்டு வீட்டை விட்டு சென்றவர்கள் தமது பொருட்களை எடுப்பதற்கு வீட்டுக்கு வந்த வேளை குறித்த நபர் நிர்வாண நிலையில் வீட்டினுள் சடலமாக காணப்பட்டார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜேயபாலசிங்கம் மேற்கொண்டார்.