ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மக்கள் போராட்டக் கூட்டணியின் பிரதிநிதி லஹிரு வீரசேகர குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.