நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பீடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலமும் இன்று(27) ஆரியபுர பொகவந்தலாவையை சேர்ந்த 51 வயதுடைய ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மலசலகூடத்தில் இவர்கள் விழுந்து கிடந்ததை அவதானித்த பொது மக்கள் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டியின் முதலுதவியலாளர்கள் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.
இந்த மரணங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.