நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (23) காலை 7:00 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பு நாளை (24) காலை 7:00 மணி வரை இருக்கும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சிலாபத்திலிருந்து கொழும்பு
மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
மேலும், திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான மற்றும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சிலாபத்திலிருந்து கொழும்பு
மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.