இவ்வாண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாது என நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்கான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி அல்லது புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட இடமளிக்கும் நோக்கில் இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாது என குறித்த அதிகாரியால் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும், எதிர்வரும் மாதங்களில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதில் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய பிரச்சினைகள் உருவாகக் கூடும் எனவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.