யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இன்று (06) காலை இளைஞர் ஒருவர் தாக்குதல் சம்பவம் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
உளவிக்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இளைஞன் மீதே கோடாரியினால் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முகத்தை மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலே குறித்த தாக்குதலை மேற்க்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் கையில் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வேலைக்கு சென்று கொண்டு இருந்தபோதே, ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் வைத்து இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.