யாழ்ப்பாணம் பொது நூலகம்
எரிக்கப்பட்டு 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (01) யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது.
யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், யாழ் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா , நூலகஊழியர்கள்,பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
நூலகம் எரிக்கப்பட்டபோதும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளின் போதும் உயிரிழந்தவர்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.