முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் முள்ளியவளை பொலிஸாரால் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றினை சோதனை செய்த முள்ளியவளை பொலிஸார் வாகனத்தின் சாவி பெட்டியில் இருந்து ஒருகைக்குண்டு, ரி – 56 ரக தோட்டாக்கள் 20 மற்றும் எல்.எம்.ஜி ரக தோட்டாக்கள் 6 ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
சம்பவத்தில், வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.