அனுராதபுரம் – கெபித்திகொல்லேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யகாவெவ புதர் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கெபித்திகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.