By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: சிறுவனை மோதி கொன்ற கோடீஸ்வரனின்மகன்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > சிறுவனை மோதி கொன்ற கோடீஸ்வரனின்மகன்!

சிறுவனை மோதி கொன்ற கோடீஸ்வரனின்மகன்!

Published October 14, 2024
Share
1 Min Read
SHARE

கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் 17 வயதான மகன் மிகவேகமாக செலுத்திய ஜீப் வண்டி, முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சிறுவனை கொன்றுள்ள சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.

கம்பளை பஸ் நிறுத்துமிடத்துக்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவைக்கு முன்பாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை, அந்த ஜீப் பின்னால் மோதியுள்ளது. அந்த முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்றரை வயதான சிறுவன், கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து கம்பளை இல்லவத்துரு பிரதேசத்துக்கு வந்திருந்த மொஹமட் சிராஸ் அம்டே என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியின் பின்னால் மோதியதன் பின்னர் அந்த ஜீப் வண்டி, அவ்விடத்தில் நிறுத்தாமல், சுமார் 55 மீற்றர் முன்னால் சென்று, கம்பளை தனியார் பஸ் நிறுத்துமிடத்துக்குள் சென்று திரும்பும் போது, அங்கு பழங்கள் விற்றுக்கொண்டிருந்தவர் மீதும் அவருக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியின் மீதும் மோதி நின்றுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: வீதி விபத்து
editor1 October 14, 2024 October 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article 3 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சிக்கல்!
Next Article கொழும்பு பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?