சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 வயதான சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அயல் வீடான சந்தேக நபரின் வீட்டுக்கு விளையாடுவதற்காக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கடந்த 23 திகதி குறித்த சிறுமியை சந்தேக நபர் தனது வீட்டில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
23 ம் திகதி தொடக்கம் 4 நாட்களாக தொடர்ந்தும் இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக சிறுமி தாயாரிடம் கூறியதைக் தொடர்ந்து குறித்த சிறுமியின் தாயாரினால் 27 ஆம் திகதி லுணுகலை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சிறுமியின் சிறிய தந்தை முறையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை நேற்றைய தினம் பசறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 10 மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.