அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட பலர் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாக தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியும் போராட்டத்தின் ஸ்தாபகரே என கூறியுள்ளார்.
“கொள்கை பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவதை நாங்கள் விரும்பவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரே நம்பிக்கை பொது மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதே.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணியாளர்களால் அது தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது. முன்னாள் போராட்டக்காரர்களில் சிலர் அவருடன் உள்ளனர்.
எனவே அவர் போராட்டத்தின் நிறுவனரும் ஆவார். அதனால் தான் நாம் ஒருவரையொருவர் நோக்கி விரல் நீட்டுவதில்லை. புத்திசாலித்தனமாகவும், எதிர்காலத்திற்கான உண்மையான திட்டத்துடன் முடிவுகளை எடுப்போம்” என்றார்.