கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (25) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 10.00மணிக்கு கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.
“சர்வதேச விசாரணையை தேவை”, “இழப்பீடுகள் வேண்டாம்”, “எமக்கு பிள்ளைகள் வேண்டும்” போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.