By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: அவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > செய்திகள் > அவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

அவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

Published June 25, 2024
Share
1 Min Read
SHARE

ரி – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

சூப்பர் 8 சுற்றில் அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப் பெற்று இந்திய அணி அரையிறுதி வாய்ப்பிற்கு தகுதிப் பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள், சென்ட் லூசியாவில் நேற்று (24) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் அணித் தலைவர் ரோஹித் சர்மா 92 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 31 ஓட்டங்களையும், ஹார்டிக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியா அணி சார்பில் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

206 ஓட்டங்கள் வெற்றியிலக்காக கொண்ட பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைப் பெற்று தோல்வியுற்றது.

அவுஸ்ரேலியா அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 76 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஷ் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, இந்திய அணி இந்த போட்டியில் 24 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டார்.

You Might Also Like

ரி-20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

சர்வதேச அரங்கில் தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ள யாழ். இளைஞன்!

 இலங்கையுடனான  மகளிர் ரி20 உலகக் கிண்ண  போட்டி:  வெற்றியை ஈட்டியது நியூஸிலாந்து!

தமிழரசிலிருந்து விலக சுமந்திரனே காரணம் _ தவராசா சாடல்!

புதிய அரசாங்கத்தின் முதல் வழக்கு நாமலுக்கு!

TAGGED: அவுஸ்ரேலிரா கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணி, இந்தியா வெற்றி
editor2 June 25, 2024 June 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article நெடுந்தீவில் கடற்படையினருக்கும் இந்திய மீனவர்களுக்கும் முறுகல் நிலை – கடற்படைவீரர் உயிரிழப்பு
Next Article காரைநகரில் குடிசை மீது பனைமரம் வீழ்ந்ததில் சிறுவன் காயம்
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?