யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் 70Kg கஞ்சாவுடன் இருவர் நேற்று(05) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகை சோதனை செய்ய முற்பட்டவேளை படகு தப்பிக்க முயன்றது.
கைது செய்யப்பட்ட இருவரும் கடற்படையினரால் நீண்ட விசாரணைகளின் பின்னர் மருதங்கேணி பொலிசாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.