திருகோணமலை – மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 275 பேருக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழேவு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நேற்று (05) மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தனர்.