வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
ஞாயிற்றுக்கிழமை இரவு வாள்களுடன் சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் மீது வாளால் வெட்டியதுடன் வாளால் வெட்டிய போது கீழே வீழ்ந்த கை துண்டையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில், செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளைஞரே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியதுடன், கையையும் இழந்துள்ளார்.