By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: நாடொன்றில் விழுந்த மர்ம பொருள்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > உலகச் செய்திகள் > நாடொன்றில் விழுந்த மர்ம பொருள்!

நாடொன்றில் விழுந்த மர்ம பொருள்!

Published January 5, 2025
Share
1 Min Read
SHARE

கென்யா  கிராமம் ஒன்றில் சுமார் 500 கிலோ எடையுள்ள விண்வெளி குப்பை விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் மகுவேனி மாவட்டத்தில் உள்ள முக்குகு  கிராமத்தில் சுமார் 2.5 மீட்டர் விட்டம் மற்றும் 500 கிலோ எடையுள்ள விண்வெளி குப்பை ஒன்று விழுந்துள்ளது.

கடந்த டிசம்பர் 30ம் திகதி கிராமத்தில் விழுந்த இந்த விண்வெளி குப்பை, ரொக்கெட்டின் பிரிப்பு வளையம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் விதமாக கென்ய விண்வெளி அமைப்பு   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,ரொக்கெட்டின் நிலைகளை இணைக்க பிரிப்பு வளையங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும், பொதுவாக மீள் நுழைவின் போது எரிந்து அழிவது அல்லது மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் விளக்கியுள்ளது.

மேலும் வானில் இருந்து அதீத வேகத்தில் வந்ததால் தான் குறித்த வளையம் சிவப்பு நிறத்தில் மாறியிருக்கிறது. அதன் வெப்பம் குறைந்ததும் அது வழக்கமான நிறத்திற்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இதுபோல நடப்பது இது முதல்முறை இல்லை. இதை ஆய்வாளர்கள் விண்வெளிக் குப்பை எனக் குறிப்பிடுகிறார்கள். விண்வெளிக் குப்பைகள் மணிக்கு சுமார் 36 ஆயிரம் கிமீ வேகத்தில் பூமியில் வந்து விழும்.

இது மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் விழுந்தால் பேரழிவு ஏற்படும். ஏற்கனவே கடந்த காலங்களில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரொக்கெட்களும், சீனரொக்கெட்களின் பகுதிகளும் இதுபோல பூமியில் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

தென்கொரியாவில் விமான விபத்து!

சூரியனுக்கு அருகில் சென்று சாதனை!

ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து

பிரபல மல்யுத்த வீரர்  காலமானார்!

 நாசா விடுத்துள்ள எச்சரிக்கை!

TAGGED: மர்ம பொருள்
editor1 January 5, 2025 January 5, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article ஐக்கிய மக்கள் சக்தியில் உள்கட்சி மோதல் !
Next Article நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?