By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: சர்வதேச இரத்தினக்கல், ஆபரண கண்காட்சி!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > சர்வதேச இரத்தினக்கல், ஆபரண கண்காட்சி!

சர்வதேச இரத்தினக்கல், ஆபரண கண்காட்சி!

Published January 5, 2025
Share
2 Min Read
SHARE

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், நேற்று (04), சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களை பார்வையிட்டார்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை (EDB) என்பன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் FACETS Sri Lanka இந்த சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி, இன்று முதல் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆசியாவின் முதன்மை இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka இம்முறை 31ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சீனா,இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கைக்கு முதல் முறையாக வரும் உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் இம்முறை நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதோடு, இரத்தினபுரி,எலஹெர,பேருவல,எஹெலியகொட,காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உள்நாட்டு இரத்தினக்கல் கொள்வனவாளர்கள் பலரும் “FACETS Sri Lanka 2025” கண்காட்சியில் பங்குபற்றியுள்ளர்.

உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பல தரப்புடனான வர்த்தக வாய்ப்புக்களை உருவாக்குவதே இந்த தொழில்துறை முன்னோடிகளின் பிரதான நோக்கமாகும். “FACETS Sri Lanka 2025 ” கண்காட்சியின் அடிப்படையில் ஏற்றுமதி மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிகமாக ஈட்டிகொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையினர் ஆவலுடன் பங்கேற்கும் “FACETS Sri Lanka 2025 ” கண்காட்சி, இலங்கையின் உயர் இரத்தினக்கல் மற்றும் ஆபரண பாரம்பரியம், பல்வகைத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கு சான்றாகும்.

இதில் தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: ஆபரண கண்காட்சி!, இரத்தினக்கல்
editor1 January 5, 2025 January 5, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!
Next Article  நிமோனியாவால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?