By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: ஜனாதிபதி, செய்யக்கூடிய விஷயங்களை மாத்திரம் மக்களிடம் கூற வேண்டும்: வேலுசாமி இராதாகிருஷ்ணன்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > ஜனாதிபதி, செய்யக்கூடிய விஷயங்களை மாத்திரம் மக்களிடம் கூற வேண்டும்: வேலுசாமி இராதாகிருஷ்ணன்!

ஜனாதிபதி, செய்யக்கூடிய விஷயங்களை மாத்திரம் மக்களிடம் கூற வேண்டும்: வேலுசாமி இராதாகிருஷ்ணன்!

Published October 29, 2024
Share
1 Min Read
SHARE

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. இதே நிலை பாராளுமன்ற தேர்தலிலும் ஏற்படும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுவாக இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து அதில் வெற்றிப்பெறும் ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சி அடுத்து வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாரியளவில் வெற்றி பெறுவதை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம்.
ஆனால், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்தின் பின் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாமல் இருக்கிற ஒரு நிலைமை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம் இந்த ஜனாதிபதியின் மீதும், அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பது காட்டுகிறது.

ஜனாதிபதி எதிர்க“கட்சியில் இருந்த போது தான் பதவிக்கு வந்தால் 48 மணித்தியாலயத்தில் பல மாற்றங்கள் செய்வதாக கூறினார். பல அதிசயங்கள் செய்யக்கூடிய திறமை என்னிடமும் தனது குழுவினரிடமும் இருப்பதாக கூறினார். ஆனால், இப்பொழுது நான் மந்திரவாதியோ, தந்திரவாதியோ இல்லை என கூறுகிறார்.
இதுதான் உண்மையான நிலைமை பதவிக்கு வருவதற்கு முன்பும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நாட்காலியில் அமர்ந்தவுடன் தான் கூறியதை நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன என்பதை அப்பொழுது தான் புரிந்து கொள்ள முடியும். எனவே, செய்யக்கூடிய விஷயங்களை மாத்திரம் நிதானமாக சிந்தித்து மக்களிடம் கூற வேண்டும்.

அதனையே ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும், ஏனைய அங்கத்தவர்களும் செய்கிறார்கள். இதனடிப்படையில் நாங்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிகளை கொண்டு புதிய அரசாங்கத்தை அமைக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: வேலுசாமி இராதாகிருஷ்ணன்
editor1 October 29, 2024 October 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை தயாரிப்பேன் : உதய கம்மன்பில!
Next Article ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?