By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: எதிர்கட்சித்தலைவருக்கு உயிர் அச்சுறுத்தல் ! வெளிநாட்டு புலனாய்வு தகவல்
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > எதிர்கட்சித்தலைவருக்கு உயிர் அச்சுறுத்தல் ! வெளிநாட்டு புலனாய்வு தகவல்

எதிர்கட்சித்தலைவருக்கு உயிர் அச்சுறுத்தல் ! வெளிநாட்டு புலனாய்வு தகவல்

Published July 16, 2024
Share
1 Min Read
SHARE

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளின் அறிக்கையின் அடிப்படையில் சஜித்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் சட்டத்தரணி நிசத் விஜேகுணவர்தன ஆகியோர் குறித்த கோரிக்கையை, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் முன்வைத்துள்ளனர்.

குறித்த கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர், பொலிஸ் மா அதிபரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து குறித்த தகவல்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல் குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் கடிதங்கள் அனுப்பி வைத்த போதிலும் பதில் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் குஜராட்டில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் தீவிரவாத சந்தேக நபர்களின் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திற்கு காணப்படும் ஆபத்து குறித்து தெரியவந்துள்ளது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்து எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு சபாநாயகர், பொலிஸ் மா அதிபரை அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: உயிர் அச்சுறுத்தல், சஜித் பிரேமதாஸ, தமிழ்கதிர் செய்திகள்
editor2 July 16, 2024 July 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென உயிரிழந்த முதியவர்
Next Article நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள்
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?