அம்பாந்தோட்டை – வீரகட்டிய மொராய பகுதியில் இடம்பெற்ற இசைநிகழ்வில் ஏற்பட்ட முரண்பாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இசைநிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் முடிவில் இளைர் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் வீரகட்டிய மொரய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.