கொழும்பு – தலஹேன பகுதியில் மனைவியை தனது நண்பனுடன் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 31 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவரும், அவரது நண்பர்களும் கூரிய ஆயுதத்தால் பெண்ணை கொலை செய்துவிட்டு வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்,குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹிகுரக்கொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான உயிரிழந்த பெண்ணின் கணவரும் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய மற்றைய சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொலை தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.