யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிக்கு அண்மித்த பகுதியில் பெண்ணொருவரை ஆணொருவர் தீ மூட்டி கொளுத்தியதால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரை அழைத்து வந்த ஆண் ஒருவர்
இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
பெண் தீயில் எரிவதைக் கண்ட குறித்த பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், குறித்த சம்வவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.