By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: பேரணியில் கலந்து கொண்ட 7 பேருக்கு பிணை!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > Breaking news > பேரணியில் கலந்து கொண்ட 7 பேருக்கு பிணை!

பேரணியில் கலந்து கொண்ட 7 பேருக்கு பிணை!

Published February 20, 2023
Share
1 Min Read
SHARE

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி கண்டன பேரணி இடம்பெற்றது.

தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராக பெப்ரவரி 7ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரினால் , யாழ். நீதவான் நீதிமன்றில் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த 7 பேருக்கும் நீதிமன்றினால் , இன்றைய தினம் திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு மன்றினால் அழைப்பாணை வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டவர்கள் மன்றில் முன்னிலையானார்கள்.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் , மன்றில் முன்னிலையானவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்து சமர்ப்பணம் செய்ததுடன், அடிப்படையிலேயே இந்த வழக்கினை மன்று தள்ளுபடி செய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்தனர்.

அத்துடன் குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசணையை கோருமாறும் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

அதனையடுத்து 7 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, மே மாதம் 08 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான , சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா மற்றும் மூத்த சட்டத்தரணி என். ஶ்ரீகாந்தா ஆகியோர் முன்னிலையாகினர்.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: பேரணியில் கலந்து கொண்ட 7 பேருக்கு பிணை!
binrr February 20, 2023 February 20, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article இலங்கையில் 700,000 வாகனங்களை திரும்பப்பெற நடவடிக்கை!
Next Article நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறாக செயற்பட்ட பெண் விளக்கமறியலில்!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?