Thursday, February 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

தலைவர் பிரபாகரன் எங்கே? பிரபாகரன் எனக் காட்டப்பட்ட சடலத்தை நாம் ஏற்கவில்லை!

Admin by Admin
February 22, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
தலைவர் பிரபாகரன் எங்கே? பிரபாகரன் எனக் காட்டப்பட்ட சடலத்தை நாம் ஏற்கவில்லை!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தலைவர் பிரபாகரன் எங்கே? பிரபாகரன் எனக் காட்டப்பட்ட சடலத்தை நாம் ஏற்கவில்லை!-

பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காக பிரபாகரனின் தாயாரிடம் “பிரபாகரன் எங்கிருக்கிறார்” என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பிரபாகரனின் தாயார் இதனைக் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சாவு தொடர்பில் அரசும், அரசில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.

You might also like

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

இதன் மூலம் போர்க் குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈபிடிபி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் எவ்வளவு படுகொலைகள், அட்டூழியங்கள் புரிந்தார் என்பதும் தெரியும். 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பரப்புரைக்காக ஊர்காவல்துறை சென்றபோது ஈபிடிபி குண்டர்களால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை சாவுத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். அப்படியென்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்திர்களா? என்பதற்கு பதில் கூறவேண்டும். இறுதிப் போரின்போது பிரபாகரன் என காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள் இலங்கை முழுவதும் பவனியாக கொண்டு சென்றிருப்பீர்கள். ஆனால் தற்போது இந்த விடயங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறி வருகிறீர்கள். சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து. அவ்வாறு என்றால் இந்த போர்க் குற்றத்திற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது.

அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா “பிரபாகரன் ஒரு வீரன், கடைசி வரை போராடி மறைந்தார் என்பதைக் கூறுகின்றார். ஓய்வு நிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர் பிரபாகரனின் கழுத்தில் இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத் தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா சரணடைந்தார்.

அவருடைய உடலை நாங்கள் புதைத்து விட்டோம் என ஒரு சிலர் கூறினார்கள். எங்கு புதைத்தோம், யார் புதைத்தது என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலைக் கரைத்து விட்டோம் என்றனர். பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக கருணாவையும், தயா மாஸ்டரையும் கூட்டிச் சென்றார்கள். உலங்குவானூர்தியில் கருணாவை கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட மருத்துவ அதிகாரியை கூட்டிச்சென்று மரண சான்றிதழ் வழங்கவில்லை.

ஒருவர் கொல்லப்பட்டால் குறித்த நபர் இந்தியாவாலும் தேடப்படும் கிறார் என்றால் ஏன் அவரின் இறப்பு விசாரணை நடைபெறவில்லை.

இந்தியாவுக்கு ஒரு நீதிமன்றச் சான்றிதழை வழங்கியுள்ளீர்கள். அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும், தந்தையும் பனாகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அப்படியென்றால் ஏன் டிஎன்ஏ பரிசோதனை செய்யவில்லை. பிரபாகரன் என காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒன்றில் அவர் தன்னைத் தானே மாய்த்திருக்க வேண்டும். அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதை வரலாறு கூறும். அதனை விடுத்து சரணடைந்தார்,சடலத்தை எடுத்தோம்,புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தமில்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காக பிரபாகரனின் தாயாரிடம் “பிரபாகரன் எங்கே இருக்கிறார்” என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூற வேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தயார் இதனைக் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

Tags: சிவாஜிலிங்கம்தமிழீழ விடுதலைப் புலிகள்தலைவர் பிரபாகரன் எங்கே? பிரபாகரன் எனக் காட்டப்பட்ட சடலத்தை நாம் ஏற்கவில்லைபிரபாகரன்
Previous Post

யாழில் பச்சைமிளகாய் திருடிய குற்றச்சாட்டில் இருவருக்கு விளக்கமறியல்!

Next Post

சம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!

Admin

Admin

Related Posts

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!
Breaking news

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!

by Admin
February 9, 2023
தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!
இலங்கைச் செய்திகள்

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

by Admin
February 4, 2023
வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
Next Post
சம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!

சம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.