Saturday, March 25, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

Admin by Admin
February 20, 2023
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் போராட்டம் ஆரம்பிக்ப்பட்டு 6 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தமது கைகளை கட்டியவாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமது உறவுகளின் படங்களையும், கறுப்பு கொடிகளையும் கரங்களில் ஏந்தியிருந்தனர்.

You might also like

கிளிநொச்சியில் சிறுமி சடலமாக மீட்பு!

நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறாக செயற்பட்ட பெண் விளக்கமறியலில்!

பேரணியில் கலந்து கொண்ட 7 பேருக்கு பிணை!

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக A9 வீதி ஊடாக டிப்போ சந்தி நோக்கி பயணித்தனர். இதன் போது OMP அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, omp வேண்டாம் என்றும், வெளியேறுமாறும் கோசங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, ராஜபக்ச குடும்பங்களை கைது செய்யுமாறும், இராணுவம் வெளியேற வேண்டும் எனவும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், தமது பிள்ளைகள் எங்கே என கேட்டும் கோசங்களை எழுப்பியவாறு குறித்த பேரணி டிப்போ சந்தியை சென்றடைந்து கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் அழுகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட உறவுகள் இன்றுவரை எங்கு என்று தெரியவில்லை. இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் நீதி கிடைக்கவில்லை. ஆனாலும் எமக்கான நீதி கிடைக்கும்வரை நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம்.

இந்த நிலையில் பொங்கல் கொண்டாடுவதற்கு வடக்கிற்கு வருகின்றனர். 2 லட்சம் நட்டயீடு தருவதாக கூறுகின்றனர். எமக்கு அவை வேண்டாம். அதனை வைத்து எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

எமக்கு எமது பிள்ளைகளே வேண்டும். சர்வதேசம் எமது பிள்ளைகளை மீட்டு தர வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

குறித்த போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
Previous Post

நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறாக செயற்பட்ட பெண் விளக்கமறியலில்!

Next Post

கிளிநொச்சியில் சிறுமி சடலமாக மீட்பு!

Admin

Admin

Related Posts

கிளிநொச்சியில் சிறுமி சடலமாக மீட்பு!
இலங்கைச் செய்திகள்

கிளிநொச்சியில் சிறுமி சடலமாக மீட்பு!

by Admin
March 4, 2023
யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது
இலங்கைச் செய்திகள்

நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறாக செயற்பட்ட பெண் விளக்கமறியலில்!

by Admin
February 20, 2023
பேரணியில் கலந்து கொண்ட 7 பேருக்கு பிணை!
Breaking news

பேரணியில் கலந்து கொண்ட 7 பேருக்கு பிணை!

by Admin
February 20, 2023
இலங்கையில் 700,000 வாகனங்களை திரும்பப்பெற நடவடிக்கை!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் 700,000 வாகனங்களை திரும்பப்பெற நடவடிக்கை!

by Admin
February 20, 2023
நெல்லை 160 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்ய கோரிக்கை!
இலங்கைச் செய்திகள்

நெல்லை 160 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்ய கோரிக்கை!

by Admin
February 20, 2023
Next Post
கிளிநொச்சியில் சிறுமி சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் சிறுமி சடலமாக மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.