Thursday, February 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனம்!

Admin by Admin
September 5, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனம்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனம்!

கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் குடும்பஸ்த்தர் மீது கடற்படையினரால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இரண்டு கைபேசிகளும் திருடப்பட்டுள்ளது.

You might also like

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றள்ளது. சம்பவத்தில் வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் நிமால் எனப்படும் 3 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது நேற்று மாலை 3.30 மணியளவில், தாக்குதலிற்குள்ளான நபரின் படகினை, அவரது நண்பர்கள் கடலிற்கு எடுத்து சென்றுள்ளனர். மாலை ஆகியும் கரை திரும்பாத நிலையில் குறித்த நபர் கடற் கரைக்கு சென்று அவதானித்துள்ளார்.

6 மணியளவில் கரைக்கு திரும்பிய படகு கடற்படை முகாமிற்கு முன்பாக கரை ஏற்றப்பட்டது. இந்த நிலயைில், படகினை செலுத்தியவர்கள், கடற்படை முகாமிற்கு பதிவிற்காக சென்றுள்ளனர். இதன்போது தமது படகில் ஏற்றி வந்த மண்ணெண்ணையை பதிவு மேற்கொள்ளும் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த மண்ணெண்ணை கொள்கலனை அகற்றுமாறு அவர்களிடம் கடற்டை அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அவர்கள் அதனை அகற்றியுள்ளனர். இந்த நிலையில் இரு தரப்பனருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

கருத்து முரண்பாட்டின்போது கடற்படை அதிகாரி ஒருவர்  அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கியை சூட்டுக்கு ஏற்ற வகையில் தயார் செய்ததாகவும், அதனை ஒளிப்பதிவு செய்ய முற்பட்டபோது தொலைபேசியை பறித்ததுடன் தம் மீது தாக்கிதாகவும் பாதிக்கப்பட்டவர்  தெரிவித்துள்ளார்.

தன்னுடன் நின்றவர்களையும் கடற்படையினர் துரத்தி துரத்தி தாக்கியதாகவும், இதன்போது தான் படுகாயமடைந்ததாகவும் இதன்போது இரண்டு கையடக்க தொலைபேசிகளை கடற்படையினர் பறித்துச்சென்றதாகவும் அவர் தெரிவிக்கின்றார். பின்னர், காயங்களிற்குள்ளான நபர் சுயநினைவிழந்து கிடப்பதை அவதானித்த கிராமத்தவர்கள், அவரை வேரவில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Tags: கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனம்!
Previous Post

புகையிரதத்தில் பயணித்தவர் ஆனையிறவு பகுதியில் தவறி விழுந்து படுகாயம்!

Next Post

சுருட்டு புகைப்பதற்க்காக மூட்டிய தீயில் எரிந்து மூதாட்டி மரணம்!

Admin

Admin

Related Posts

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!
இலங்கைச் செய்திகள்

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

by Admin
February 4, 2023
வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
Next Post
யாழில் ஆறு பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்!

சுருட்டு புகைப்பதற்க்காக மூட்டிய தீயில் எரிந்து மூதாட்டி மரணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.