class="post-template-default single single-post postid-1705 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Friday, June 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

யாழில் குடும்பஸ்தர் படுகொலை!

Admin by Admin
April 12, 2023
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
யாழில் குடும்பஸ்தர் படுகொலை!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

இலங்கையில் குரங்கம்மை!

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

சாவகச்சேரி புத்தூர்ச் சந்தியில் ஒருவர் குத்தி கொலை!
யாழ்.சாவகச்சேரி மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச்  சங்க பராமரிப்பாளர் ஒருவர் அலவாங்கால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார்  தெரிவித்தனர்.
 இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் வசித்துவரும் 20 வயதான இளைஞர் ஒருவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநல சிகிச்சைக்காக  கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 இந்நிலையில் நேற்றைய தினம்(10) குறித்த இளைஞர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடி  புத்தூர் சந்தியிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால்,  தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இளைஞரைப் பராமரித்துவந்த  நோயாளர் நலன்புரிச் சங்கத்தைச் சேர்ந்த நி.நாகச்செல்வன் என்பவரும், இளைஞரின் உறவினர் ஒருவருமாக இளைஞரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தனர்.
 அப்போது, புகையிரதக் கடவையில்  அமர்ந்திருந்த குறித்த இளைஞரோடு நோயாளர் நலன்புரிச்சங்க  பராமரிப்பாளர் உரையாடியதோடு, இளைஞரின் வீட்டுக்கும் அவரோடு சென்றுள்ளார்.
 இதன்போது இளைஞரின் உறவினர்  முச்சக்கர வண்டியோடு வீதியோரத்தில் காத்திருந்தார்.
இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து  இளைஞர் மட்டும் வெளியே வந்து மீண்டும் புகையிரதக் கடவையில் அமர்ந்து கொண்டார்.
 வீட்டுக்குள் சென்ற நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளரை காணாத இளைஞரின் உறவினர் அவரது தொலைபேசிக்கு அழைப்பெடுத்தார்.
 நீண்ட நேரமாக அழைத்தும் பதில் கிடைக்காத்தால், புகையிரத வீதியில் அமர்ந்திருந்த இளைஞரிடம் சென்று வினவியுள்ளார்.
இதன்போது, “பராமரிப்பாளரை வீட்டு முற்றத்தில் வைத்து அலவாங்கால் குத்தி கொலை செய்துவிட்டேன்” என இளைஞர் தெரிவித்துள்ளார்.
 இதையடுத்து வீட்டு முற்றத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த நலன்புரிச் சங்க பராமரிப்பாளர்  முகத்தில் பலத்த காயங்களோடு சடலமாகக் கிடந்துள்ளார்.
 இதையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.
சடலமாக மீட்க்கப்பட்டவர்   ஆனைக்கோட்டை தெற்கு கூழாவடியைச் சேர்ந்த குடும்பஸ்தரான நி.நாகச்செல்வன் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
Tags: யாழில் குடும்பஸ்தர் படுகொலை!
Previous Post

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

Next Post

கற்பிணி மனைவி மீது துப்பாக்கிச் சூடு கணவன் கைது!

Admin

Admin

Related Posts

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

by Admin
June 7, 2023
இலங்கையில் குரங்கம்மை!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் குரங்கம்மை!

by Admin
June 7, 2023
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!
இலங்கைச் செய்திகள்

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

by Admin
June 7, 2023
இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!

by Admin
June 7, 2023
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!
Breaking news

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

by Admin
June 7, 2023
Next Post
யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது

கற்பிணி மனைவி மீது துப்பாக்கிச் சூடு கணவன் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.